நேபாளத்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த பேருந்து விபத்தில் 18 பேர் பலியாகினர்.
தடிங்பேஷி என்னுமிடத்திலிருந்து மார்பாக் என்கிற இடத்துக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து மலைப் பாதையிலிருந்து விலகி பள்ளத்தாக்கில் 300 மீட்டர் ஆழத்தில் உருண்டு விழுந்தது. இதில் 4 பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர். இதில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஹெலிகாப்டர் மூலமாக அவர்கள் தலைநகர் காத்மாண்டுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். மற்ற பயணிகள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.