கொலம்பியா நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 254ஆக உயர்வு
கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 254ஆக உயர்ந்துள்ளது.
கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 254ஆக உயர்ந்துள்ளது.
தென்மேற்கு கொலம்பியாவின் பல பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அத்துடன், வீடுகள், பாலம், வாகனம், மரம் உள்ளிட்டவை நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
இந்நிலையில் கொலம்பியாவில் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 254ஆக உயர்ந்துள்ளது. அவற்றில் 43 குழந்தைகள் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.