உலகம்

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: 3 பேர் சாவு

Raghavendran

இந்தோனேஷியாவில் சனிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.  சுமார் ஒரு நிமிடம் வரை இந்த நிலநடுக்கம் நீடித்துள்ளது. இதன்காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் வரை படுகாமடைந்துள்ளனர்.

முன்னதாக, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டேர் அளவில் 6.5 ஆகப் பதிவானது.

இதில், 80 வயது மதிக்கத்தக்க பெண், 62 வயது மதிக்கத்தக்க ஆண் ஆகியோர் நிலநடுக்கத்தின் காரணமாக வீட்டினுள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 34 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டிலிருந்து வெளியேற முயன்ற போது சிக்கி உயிரிழந்தார்.

இதையடுத்து அந்நாட்டின் தேசிய பேரிடர் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்த நிலநடுக்கானது ஜாவா தீவுகளின் மேற்கு பகுதியில் உள்ள டாஸிக்மாலயா என்ற நகரத்தில் இருந்து 92 கி.மீ. ஆழத்திலும், 52 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டதாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT