அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ.யின் இயக்குநர் பதவிக்கு வழக்குரைஞரும், முன்னாள் நீதித் துறை அதிகாரியுமான கிறிஸ்டோஃபர் ரேவின் பெயரை அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார்.
அண்மையில் அவரால் பதவி நீக்கம் செய்யப்பட்ட எஃப்.பி.ஐ. முன்னாள் இயக்குநர் ஜேம்ஸ் கோமியிடம் அதிமுக்கியமான விவகாரங்கள் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு விசாரிக்கவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. முன்னதாக, கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டு வரை நீதித் துறையில் குற்றவியல் பிரிவுப் பொறுப்பாளராக கிறிஸ்டோஃபர் ரே பதவி வகித்துள்ளார்.