உலகம்

சிரியாவில் கார் வெடிகுண்டு தாக்குதல்: 10 பேர் பலி

DIN

பெய்ரூட்: சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிரியா நாட்டின் இட்லிப் மாகாணத்தில் உள்ள அல்-டனா நகரின் சந்தை பகுதியில் இன்று காலை பொருள்கள் வாங்க பொதுமக்கள் ஏராளமானோர் கூடினர்.  அப்போது, சந்தை அருகே நிறுத்தப்பட்டிருந்த வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை தீவிரவாதிகள் வெடிக்க செய்தனர்.

இந்த தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT