உலகம்

இந்திய எல்லை அருகே சீனா பீரங்கி சோதனை

இந்திய எல்லை அருகே தனது புதிய இலகு ரக பீரங்கியை வெடித்து சோதனை செய்ததாக சீனா தெரிவித்துள்ளது

DIN

இந்திய எல்லை அருகே தனது புதிய இலகு ரக பீரங்கியை வெடித்து சோதனை செய்ததாக சீனா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீன ராணுவ செய்தித் தொடர்பாளர் வூ கியான், தலைநகர் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
சீன ராணுவம் திபெத்தின் சமவெளிப் பகுதிகளில் பீரங்கி குண்டுகளை வீசி சோதனை செய்ததாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மையே. சீனா உருவாக்கியுள்ள, 35 டன் எடை கொண்ட புதிய இலகு ரக பீரங்கி அந்தப் பகுதியில் சோதித்துப் பார்க்கப்பட்டது என்றார் அவர்.
இந்தப் பரிசோதனை, இந்தியாவுக்கு எதிரானதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, '''புதிய இலகு ரக பீரங்கியின் செயல்திறன் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் மட்டுமே திபெத் பகுதியில் அந்த பீரங்கியை பரிசோதித்துப் பார்ததோம். மற்றபடி, எந்த நாட்டுக்கும் எதிராக அந்தப் பரிசோதனை நடத்தப்படவில்லை'' என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தொடக்கம்

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்..? பி.விஸ்வநாதன், செயலர், அகில இந்திய காங்கிரஸ்.

செப்டம்பரில் 36.76 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட தமிழகம் வலியுறுத்தல்

"குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளது' குறித்து...வாசகர்களிடம் இருந்து வந்த கருத்துகளில் சில...

வாழ்க்கைத் துணையாகும் வாசிப்பு

SCROLL FOR NEXT