பயங்கரவாதத்துக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை மதங்களுக்கு இடையேயான போராகக் கருதக் கூடாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
சவூதி அரேபிய பயணத்தின்போது பல்வேறு மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது: மனித குலத்தையே அழிக்கும்விதமாகத் தாக்கும் காட்டுமிராண்டிக் குற்றவாளிகளுக்கும், மனித குலத்தைக் காப்பதற்குத் துணிந்த எல்லா மதங்களைச் சேர்ந்த நல்லவர்களுக்கும் இடையே தற்போது போர் நடக்கிறது. இது நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடக்கும் போர். இது மதங்களுக்கு இடையேயான போர் அல்ல என்றார்.