உலகம்

சிரியா: ஆளில்லா விமான தாக்குதலில் 8 ஹிஸ்புல்லாக்கள் பலி

DIN

சிரியாவில் நிகழ்த்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலில் ஹிஸ்புல்லா படையைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர். 
இதுகுறித்து பிரிட்டனைச் சேர்ந்த சிரியாவுக்கான மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
சிரியாவின் கிழக்கு பாலைவனப் பகுதியில் நிகழ்த்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ஹிஸ்புல்லா படையைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர். 
இந்த தாக்குதலை நடத்திய விமானம் யாருக்கு சொந்தமானது என்று தெளிவான தகவல் இல்லை. ஹிஸ்புல்லா அதிகாரிகளும் இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும் பலி எண்ணிக்கையை அந்த அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல் பயங்கரவாத குழு, சிரிய அரசுக்கு ஆதரவான படைகள் அனைத்தும் ஒன்றிணைந்து சிரியாவில் கிழக்குப் பகுதியில் கோலோச்சி வரும் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு (ஐ.எஸ்.) எதிராக போரிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT