வியத்நாமில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 54-ஆக அதிகரித்தது.
வியத்நாமின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் புயல் தாக்கியதையடுத்து, கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளானது.
வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலையில் 54-ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 31-ஆக உள்ளது. காணாமல் போன 39 பேரைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
மழை வெள்ளத்தால், 30,000 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், பயிர்கள், கால்நடைகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் வியத்நாமின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.