உலகம்

சவூதி தீ விபத்தில் 10 பேர் பலி

DIN

சவூதியில் தச்சு தொழிற்கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து போலீஸார் தெரிவித்ததாவது:
தலைநகர் ரியாதில் உள்ள பதர் மாவட்டத்தில் உள்ள தச்சுத் தொழிற்கூடத்தில் சனிக்கிழமை இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தொழிற்கூடம் முழுவதும் மளமளவென பரவிய அந்த தீயில் சிக்கி பணியாளர்கள் 10 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
தீ விபத்து குறித்து உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். 
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசராணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT