உலகம்

நடுக்கடலில் தத்தளித்த 40 அகதிகள் மீட்பு; 15 பேர் பலி

DIN

அகதிகளை ஏற்றி வந்த படகு துருக்கியையொட்டிய கருங்கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து நடுக்கடலில் தத்தளித்த 40 அகதிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அந்த விபத்தில் 15 பேர் பலியாகினர்.
இதுகுறித்து துருக்கி அரசு செய்தி நிறுவனமான அனடோலு தெரிவித்துள்ளதாவது: அகதிகளை அதிக எண்ணிக்கையில் ஏற்றிச் சென்ற மீன்பிடிப் படகு கருங் கடல் பகுதியில் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. கடலில் தத்தளித்த 40 பேர் துருக்கி கடலோரக் காவல் படையினரால் மீட்கப்பட்டனர். வெள்ளத்தில் மூழ்கி 15 பேர் உயிரிழந்தனர். மேலும், சுமார் 15 அகதிகளைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்தப் படகு அகதிகளை ஏற்றி ருமேனியாவை நோக்கிச் சென்றதாகத் தெரிகிறது என்று அனடோலு தெரிவித்துள்ளது.
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா, இராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி ஆபத்தான முறையில் படகுகளில் பயணம் செய்கின்றனர். இதனால், மத்தியதரைக் கடல், கருங்கடல் பகுதிகளில் படகுகள் மூழ்கி அகதிகள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது.
கடந்த 2015-ஆம் ஆண்டில் மட்டும், 10 லட்சம் அகதிகள் ஆபத்தான முறையில் கடல் பயணம் மேற்கொண்டனர். 
அப்போது ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி ஆயிரக் கணக்கானோர் கடலில் மூழ்கி பலியாகினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

SCROLL FOR NEXT