உலகம்

தொடங்கியது ஜெர்மனி அதிபர் தேர்தல்: நான்காவது முறையாக ஏஞ்சலா மெர்கல்? 

ஜெர்மனியில் இன்று தொடங்கியுள்ள அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவில் தற்போதைய அதிபர் ஏஞ்சலா மெர்கல் நான்காவது முறையாக வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

DIN

பெர்லின்: ஜெர்மனியில் இன்று தொடங்கியுள்ள அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவில் தற்போதைய அதிபர் ஏஞ்சலா மெர்கல் நான்காவது முறையாக வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஜெர்மனியில் ஆளும் கன்சர்வேடிவ் கூட்டணி சார்பாக ஏஞ்சலா மெர்கல் அதிபராகப் பதவி வகித்து வருகிறார். ஜெர்மனியில் அதிபரின் பதவி காலம் 4 வருடங்கள் ஆகும். அவரது பதவிக் காலம் தற்பொழுது முடிவுக்கு வருவதைத் தொடர்ந்து அதிபர் தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இம்முறை அதிபர் தேர்தலில் மூன்று முறை அதிபராகாப் பதவி வகித்துள்ள ஏஞ்சலா மெர்கல் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அவருக்கு போட்டியாக சமூக ஜனநாயக கட்சியை சேர்ந்த மார்டின் ஸ்கல்ஸ் களத்தில் இருக்கிறார்.

அதிபர் தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் மெர்கல்லின் கன்சர்வேடிவ் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் எனத் தெரிவிக்கின்றன. எனவே நான்காவது முறையாக அவர் அதிபராக பொறுப்பேற்கு அதிக சாத்தியங்கள் உள்ளன.

இந்நிலையில் அதிபர் தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை தொடங்கியது. அந்நாட்டு நேரப்படி  மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு முடிவுக்கு வரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டவா் 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்றவா் கைது

வீட்டில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

திருப்பத்தூா்: சிறப்பு முகாம்கள் மூலம் 18,935 மனுக்கள்

காா்-பைக் மோதல்: பொறியியல் மாணவா்கள் இருவா் மரணம்

SCROLL FOR NEXT