ஜோர்டானுக்கான இஸ்ரேல் தூதர் அமீர் வீஸ்பிராட், ஏறத்தாழ 9 மாதங்களுக்குப் பிறகு தனது பதவியை திங்கள்கிழமை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, ஸ்க்ரூடிரைவரால் தாக்க வந்ததாக இரு ஜோர்டானியர்களை இஸ்ரேலிய தூதரக பாதுகாவலர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சுட்டுக் கொன்றதால் இரு நாட்டு நல்லுறவில் நீடித்து வந்த பதற்றம் முடிவுக்கு வந்தது.