உலகம்

உகாண்டாவில் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி 

DIN

கம்பாலா: ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மலைப்பாதை வழியே சென்ற பேருந்து நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் சாலைகள் அரசால் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மலைப்பாதை வழியே சென்ற பேருந்து நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 

உகாண்டா நாட்டின் கப்ச்சோர்வா மாவட்டத்தில் உள்ள கப்ச்சோர்வா - பேல் நெடுஞ்சாலையின் அருகில் அமைந்துள்ள மலைப்பாதை வழியே பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று நிலைதடுமாறிய பேருந்து மலைமுகட்டில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குளானது.

இதில் 19 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT