முகப்பு
உலகம்

வெனிசுலா சிறையில் கலவரம்: 68 கைதிகள் உயிரிழப்பு

வெனிசுலாவில் சிறைக் கலவரத்தின்போது ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 68 கைதிகள் பரிதாபமாக பலியாகினர்.

Updated On : 29 மார்ச், 2018 at 1:58 PM
பகிர்:

வெனிசுலாவில் சிறைக் கலவரத்தின்போது ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 68 கைதிகள் பரிதாபமாக பலியாகினர்.

வெனிசுலா நாட்டில் வாலன்சியா நகரில் உள்ள சிறையில் பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய சிறைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று கைதிகளுக்கு இடையே திடீரென கலவரம் மூண்டது. அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 68 கைதிகள் பரிதாபமாக பலியாகினர். 

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வெனிசுலா அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.