உலகம்

வடகொரிய அதிபரை நம்பும் தென் கொரிய மக்கள்- கருத்துக் கணிப்பு வெளியீடு

Raghavendran

இரு கொரிய அதிபர்களின் சந்திப்புக்கு பின்னர் வட கொரிய அதிபர் மீது தென் கொரிய மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஏப்ரல் 27-ஆம் தேதி வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜீயின் ஆகியோர் சந்தித்துப் பேசினர். பல காலமாக தொடர்ந்து இருந்து வந்த பகைக்கு இடையே இவர்களின் இந்த சந்திப்பு உலக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

இதையடுத்து வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், தற்போது தென் கொரிய மக்களால் அதிகளவில் நம்பப்படுவதாக அந்நாட்டு ஊடகம் எடுத்துள்ள கருத்துக் கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியா முழுவதும் நடத்தப்பட்ட அந்த கருத்துக் கணிப்பின் முடிவில் 78 சதவீத மக்கள் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக 17 சதவீத மக்கள் அதீத நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

அதுபோல இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பு வெற்றிகரமாக அமைந்ததாக 89 சதவீத மக்கள் நம்பிக்கை தெரிவித்ததாக கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

புணே படகு விபத்து: 5 சடலங்கள் மீட்பு

ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி

இஸ்ரேல் இனியும் தாமதிக்கக் கூடாது : பிணைக்கைதிகளின் குடும்பத்தினர் கோரிக்கை!

சர்வாதிகார அரசை அகற்றுவதே குறிக்கோள்: காங்கிரஸ்

SCROLL FOR NEXT