உலகம்

சோமாலியா தொடர் கார் குண்டுவெடிப்பு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு

DIN

சோமாலியா தலைநகர் மொகதிஷூவில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. 

சோமாலிய தலைநகர் மொகதிஷூவில் பிரபல விடுதியின் அருகே 3 கார்களில் நேற்று (வெள்ளிக்கிழமை) அடுத்தடுத்து குண்டுவெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, அவர்கள் தெரிவித்துள்ளதாவது, 

"பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து வெளியான தகவல்கள் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது" என்று காவல் துறை அதிகாரி இப்ராஹிம் முகமது தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொக்கன் தோற்கும் இடம்..!

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

SCROLL FOR NEXT