உலகம்

ஊழல் வழக்கில் தென் கொரிய முன்னாள் அதிபருக்கு 15 ஆண்டு சிறை; ரூ. 8 கோடி அபராதம் 

IANS

சியோல்: ஊழல் வழக்கில் தென் கொரிய முன்னாள் அதிபர் லீ ம்யூங் பாக்கிற்கு 15 ஆண்டு சிறைதணடனையும், ரூ. 8 கோடி அபராதமும் விதித்து தென்கொரிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது 

2008-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை தென் கொரிய அதிபராக இருந்தவர் லீ ம்யூங் பாக். இவர் தனது ஆட்சிக்காலத்தில் அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

அதிலும் குறிப்பாக அவரது சகோதரர் பெயரில் இயங்கி வந்த DAS எனும் நிறுவனத்தில் போலி கணக்குகளை உருவாக்கி பண மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது பலத்த குற்றசாட்டு எழுந்தது. அதன்பேரில் அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. 

இந்நிலையில் ஊழல் வழக்கில் தென் கொரிய முன்னாள் அதிபர் லீ ம்யூங் பாக்கிற்கு 15 ஆண்டு சிறைதணடனையும், ரூ. 8 கோடி அபராதமும் விதித்து தென்கொரிய நீதிமன்றம் வெள்ளியன்று தீர்ப்பளித்துள்ளது 

வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட நான்காவது அதிபர் லீ ம்யூங் பாக் என்பது குறிப்பிடத்தக்கது.   
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT