உலகம்

அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்கள் இருவருக்கு 2018 பொருளாதார நோபல் அறிவிப்பு  

DIN

ஸ்டாக்ஹோம்:   பருவ நிலை மாற்றமானது பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தொடர் பாதிப்புகள் குறித்த ஆய்விற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்கள் இருவருக்கு 2018-ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.      

முன்னதாக 2018-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்புகள் கடந்த வாரம் திங்கள் முதல் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதலாவதாக மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பும், தொடர்ந்து செவ்வாயன்று இயற்பியலுக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டது. பின்னர் அமைதிக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பும் வெளியானது.  ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் பரிசுக் கமிட்டியினர் இதனை வெளியிட்டனர். 

இந்நிலையில் பருவ நிலை மாற்றமானது பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தொடர் பாதிப்புகள் குறித்த ஆய்விற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்கள் இருவருக்கு 2018-ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.      

அமெரிக்காவின் வில்லியம் நார்தாஸ் மற்றும் பால் ரோமர் ஆகிய இருவருக்கும் 2018-ஆம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசானது கூட்டாக வழங்கப்படுகிறது.       

உலகம் முழுவதும் பருவ நிலை மாற்றமானது பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தொடர் பாதிப்புகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்த நீண்ட கால ஆராய்ச்சிக்காக அவர்களுக்கு இந்த விருதானது பகிர்ந்து வழங்கப்படுகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT