முகப்பு
உலகம்

கனடாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம்

கனடாவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் உணரப்பட்டன.

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:07 PM
பகிர்:


வாஷிங்டன்: கனடாவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் உணரப்பட்டன.

இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, முதல் நிலநடுக்கம் இன்று காலை உணரப்பட்டது. இது 6.6 என்ற ரிக்டர் அளவிலும், அடுத்த நிலநடுக்கம் 6.8 ஆகவும் பதிவானது.

அரை மணி நேரம் கழித்து 122 மைல் தூரத்தில் தென்மேற்குப் பகுதியில் 3வது நிலநடுக்கமும், அதே பகுதியில் 15 நிமிட இடைவெளியில் 4வது நிலநடுக்கமும் உணரப்பட்டது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு அல்லது பொருள் சேதம் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை.

மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.