உலகம்

ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு

DIN


டோக்கியோ: ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: ஜப்பானின் வடக்குப் பகுதியில் ஹொக்கைடோ தீவின் ராவுசு பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 அலகுகளாகப் பதிவானது. 

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஹொக்கைடோ தீவு பகுதியில் உள்ள ராவுசு நகரங்களில் நன்கு உணரப்பட்டது. இதையடுத்து, அந்நகர குடியிருப்பு வாசிகள் அனைவரும் பாதுகாப்பான இடங்களை நோக்கி பயந்து ஓடினர். 

ஒரு மாதத்துக்கு முன்புதான் 6.7 அலகுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு அங்கு 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதன் காரணமாகவே அங்கு பதற்றம் அதிகமாகவே தொற்றிக் கொண்டது. 

இந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர் அல்லது காயமுற்றவர் குறித்து இதுவரை தகவல் இல்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்செக்ஸ் 6000 புள்ளிகள் வீழ்ச்சி: ரூ.36 லட்சம் கோடி முதலீடு இழப்பு!

25 தொகுதிகளின் இடைத்தேர்தல்: நிலவரம் என்ன?

காந்தி நகரில் தொடர்ந்து முன்னிலையில் அமித்ஷா!

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை இடைத்தேர்தல்: முன்னாள் முதல்வர் மனைவிக்கு பின்னடைவு

மக்களவைத் தேர்தல் நேரலை: பெரும்பான்மை இடங்களில் தேஜகூ முன்னிலை

SCROLL FOR NEXT