நைஜீரியா: போகோ ஹராம் தாக்குதல்: பலி 48-ஆக உயர்வு
நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் ராணுவத்தினரை குறிவைத்து நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48-ஆக உயர்ந்துள்ளது.
நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் ராணுவத்தினரை குறிவைத்து நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48-ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்ததாவது: நைஜீரியாவின் வடக்கு மாகாணமான போர்னோவில் உள்ள ஸரி கிராமத்தில் ராணுவத்தினர் அமைத்திருந்த முகாமை குறிவைத்து போகோ ஹராம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் சிலர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயந்தது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏராளமான லாரிகளில் வெடிகுண்டுகளை நிரப்பி வந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினரை குறிவைத்து அந்தத் தாக்குதலை நடத்தினர். பல மணி நேரம் நீடித்த இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் சார்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.
நைஜீரியாவில் அண்மைக் காலமாக போகோ ஹரம் பயங்கரவாதிகள் ராணுவ நிலைகளை குறிவைத்து அதிக அளவில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.