இலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்கள் எதிரொலி: வியாழனன்று அதிபர் சிறீசேனா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்
இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களின் எதிரொலியாக, வியாழனன்று அதிபர் சிறீசேனா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.
கொழும்பு: இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களின் எதிரொலியாக, வியாழனன்று அதிபர் சிறீசேனா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினமான ஞாயிறன்று தேவாலயங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 359 பேர் மரணமடைந்தனர். 500-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை போலீசார் இதுவரை 58 பேரைக் கைது செய்துள்ளனர். 18 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது
இந்நிலையில் இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களின் எதிரொலியாக, வியாழனன்று அதிபர் சிறீசேனா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.
Advertisement
Advertisement
அதிபர் மைத்ரிபால சிறீசேனா தலைமையில் வியாழன் காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து கட்சி நிர்வாகிகள், மற்றும் தலைவர்களுடன் அதிபர் ஆலோசனை நடத்த உள்ளார்.
அதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு அதிபர் தலைமையில் சர்வ சமய கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.