செவ்வாய் கிரகத்துக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் ஆய்வுக் கலம் அனுப்ப ஐக்கிய அரபு அமீரகம் திட்டமிட்டுள்ளது. ஜப்பானிலுள்ள டானேகஷிமா ஏவுதளத்திலிருந்து அந்த ஆய்வுக் கலம் செலுத்தப்படவிருக்கிறது.
ஹோப் புரோப் (நம்பிக்கை திட்டம்) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம் வெற்றியடைந்தால், அரபு உலகத்திலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு ஆய்வுக் கலம் அனுப்பிய முதல் நாடு என்ற பெருமையை ஐக்கிய அரபு அமீரகம் பெறும்.