உலகம்

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 3 ஆயிரம் பேர் சிரியாவில் உள்ளனர்: ரஷியா

ஐஎஸ்ஐஎஸ் சர்வதேச பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 3 ஆயிரம் பேர் சிரியாவில் உள்ளதாக ரஷியா செவ்வாய்கிழமை தெரிவித்தது. 

DIN

ஐஎஸ்ஐஎஸ் சர்வதேச பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 3 ஆயிரம் பேர் சிரியாவில் உள்ளதாக ரஷியா செவ்வாய்கிழமை தெரிவித்தது. இதுதொடர்பாக ஐ.நா.வுக்கான ரஷிய துணைப் பிரதிநிதி ஜென்னடி குஸ்மின் கூறுகையில்,

சிரியாவில் தற்போதைய சூழலில் ஐஎஸ்ஐஎஸ் சர்வதேச பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 3 ஆயிரம் பயங்கரவாதிகள் உள்ளனர். அதுமட்டுமல்லாமல், இதர பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அங்கே பயங்கர ஆயுதங்களுடன் தயார் நிலையில் இருக்கின்றனர் என்று தெரிவித்தார்.

முன்னதாக, சிரியா மற்றும் ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடங்களைக் கைப்பற்றிவிட்டதாக அமெரிக்கா தெரிவித்திருந்த நிலையில், ஸ்போராடிக் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT