உலகம்

வடகொரியாவை கண்காணித்து வருவதாக ஜப்பான் தகவல்

DIN

முக்கிய அணு ஆயுதச் சோதனை நடத்தப்பட்டதாக வெளியான தகவலையடுத்து வடகொரியாவை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் வடகொரியா முக்கிய அணு ஆயுதச் சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. அமெரிக்காவுடனான சுமூக உறவு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக வடகொரியா கூறி வரும் நிலையில், இந்த அணு ஆயுதச் சோதனை சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல், இந்தாண்டு மே மாதம் முதல் வடகொரிய நடத்தியுள்ள 12-ஆவது அணு ஆயுதச் சோதனை இதுவாகும்.

இந்நிலையில், வடகொரியா நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய அணு ஆயுதச் சோதனையை நடத்தியுள்ளது. அங்கு நடைபெறும் அணு ஆயுதச் சோதனைகள் மற்றும் அதுதொடர்பான நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்ந்து கண்காணித்து வருவதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. 

மேலும் தங்கள் நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஜப்பான் அரசு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேன்ஸ் திரைப்பட விழா: விருது வென்ற இயக்குநருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கௌதம் கம்பீருக்கு வெற்றுக் காசோலை வழங்கிய ஷாருக்கான்..?

இந்த வாரம் கலாரசிகன் - 26-05-2024

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

SCROLL FOR NEXT