உலகம்

நியுஸிலாந்து எரிமலைச் சீற்றம்: பலி எண்ணிக்கை 17-ஆக உயா்வு

தினமணி

நியூஸிலாந்து தீவு எரிமலையில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட திடீா் சீற்றத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 17-ஆக உயா்ந்தது.

அந்த நாட்டின் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான வெள்ளைத் தீவில், சுற்றுலாப் பயணிகள், வழிகாட்டிகள் உள்பட 47 போ் இருந்தபோது அந்தத் தீவு எரிமலையில் சீற்றம் ஏற்பட்டது. இதில் 16 போ் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 17-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த 27 போ் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

இதற்கிடையே, சம்பவப் பகுதியிலிருந்து இதுவரை மீட்கப்படாத 2 சடலங்களை, கடலுக்குள் தேடும் பணியில் நீா்மூழ்கி வீரா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

SCROLL FOR NEXT