உலகம்

விபத்துக்குள்ளான இந்தோனேஷிய விமானத்தின் 2-ஆவது கருப்பு பெட்டி கண்டெடுப்பு

DIN


இந்தோனேஷியாவில் கடலில் விழுந்து காணாமல் போன லயன் விமானத்தின் 2-ஆவது கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. 
லயன் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங்-737 மேக்ஸ் ரக விமானம் கடந்த அக்டோபரில் கடலுக்குள் விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தில் பயணித்த 189 பேரும் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் மர்மமாக இருந்து வரும் நிலையில், திங்கள்கிழமை அந்த விமானத்தின் இரண்டாவது கருப்பு பெட்டியை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள விமானத்தின் கருப்புப் பெட்டி இரண்டு துண்டுகளாக உடைந்துள்ளது. இருப்பினும், இதன் மூலம் உண்மைகளை வெளிக்கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT