இந்தோனேஷியாவில் செவ்வாய்க்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் சும்பா தீவுக்கு அருகே கடல் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு
கோலில் 6.4 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. அந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மேலும் இரு சக்தி வாய்ந்த பின்னதிர்வுகள் ஏற்பட்டன. எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. மேலும், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.