பிலிப்பின்ஸில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 51 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
பிலிப்பின்ஸின் தென் பகுதியில், மேட்ரிட் நகர் அருகே சனிக்கிழமை அதிகாலை 4.42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 5.8 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் காரணமாக சில வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டன. இதில் 51 பேர் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும் "நெருப்பு வளையம்' என்றழைக்கப்படும் பகுதியில் பிலிப்பின்ஸ் அமைந்துள்ளதால், அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.