ஆப்கானிஸ்தானில் நெடுஞ்சாலை அருகே குண்டுவெடிப்பு: 34 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் நெடுஞ்சாலை அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் நெடுஞ்சாலை அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் ஹெராட் - கந்தாகர் நெடுஞ்சாலை அருகே இன்று அதிகாலை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் பெண்கள், குழந்தைகள் என 34 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கந்தகார் மாகாணத்தில் பரபரப்பான சந்தையில் அண்மையில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.