உலகம்

ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதல்: இலங்கை நாடாளுமன்றக் குழு விசாரணை தொடக்கம்

DIN


இலங்கையில் ஈஸ்டர் தினத்தின்போது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமா? என்பது குறித்த நாடாளுமன்ற சிறப்புக் குழுவின் விசாரணை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
அதிபர் மைத்ரிபால சிறீசேனாவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி இந்த விசாரணை தொடங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஈஸ்டர் தினத் தற்கொலைத் தாக்குதலுக்கு, அரசின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இருந்த குறைபாடுகள் காரணமா என்பது குறித்து நாடாளுமன்ற சிறப்புக் குழு  செவ்வாய்க்கிழமை விசாரணை தொடங்கியது.
தொடக்கத்தில், இதுகுறித்து முஸ்லிம் தலைவர்களிடமிருந்து விளக்கங்கள் பெறப்பட்டன. அப்போது, மக்களிடையே மதவெறி தூண்டப்படுவது குறித்து ஏற்கெனவே அதிகாரிகளிடம் எச்சரிக்கை விடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
மேற்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஆஸாத் சாலியை நாடாளுமன்றக் குழு நேரில் அழைத்து அவரிடம் விசாரணை நடத்தியது.
முன்னதாக, இந்த விவகாரத்தில் நாடாளுமன்றக் குழு விசாரணை நடத்துவதற்கு அமைச்சரவை தலைவரான அதிபர் சிறீசேனா எதிர்ப்பு தெரிவித்தார்.
அந்த விசாரணையை தடுத்து நிறுத்தாவிட்டால், இனி வரும் அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொள்ளப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அவரது எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்றக் குழுவின் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT