உலகம்

ரத்தாகிறது குடியுரிமை; நாடு கடத்தப்படுகிறாரா மெஹுல் சோக்சி? 

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் ஈடுபட்டு தற்போது ஆண்டிகுவா நாட்டில் பதுங்கியுள்ள பிரபல வைர வியாபாரி மெஹுல் சோக்சியின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டு, அவர் விரைவில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட ...

DIN

புது தில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் ஈடுபட்டு தற்போது ஆண்டிகுவா நாட்டில் பதுங்கியுள்ள பிரபல வைர வியாபாரி மெஹுல் சோக்சியின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டு, அவர் விரைவில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெஹுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000  கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். மோசடி பற்றிய தகவல்கள் வெளிவரும் முன்னரே இருவரும் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டனர். இந்த மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணை தற்போது மும்பை சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் நடக்கிறது

இதனிடையே மெஹுல் சோக்சி, மேற்கிந்திய தீவு நாடுகளில் ஒன்றான ஆன்டிகுவாவில் குடியுரிமைபெற்று பதுங்கி இருப்பது தெரியவந்தது. அதையடுத்து அவரது ஆண்டிகுவா குடியுரிமையை ரத்து செய்து, அவரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு துவக்கியது.

இந்நிலையில் மெஹுல் சோக்சியின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டு, அவர் விரைவில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக ஆண்டிகுவா பிரதமர் காஸ்டன் பிரவுன் முடிவு செய்துள்ளதாக உள்ளூர் நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.  அதில்,  ”நிதி குற்றங்களில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்ட எந்த கிரிமினல்களுக்கும் ஆண்டிகுவாவில் அடைக்கலம் கொடுக்க விரும்பவில்லை. சட்ட ரீதியில் வழக்கு தொடர சோக்ஷிக்கு அனுமதி கொடுக்கப்படும்.  சட்ட நடவடிக்கைகள் முடிந்த பின்னர், அவர் நிச்சயம் நாடு கடத்தப்படுவார்” என்று அவர் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் துப்பாக்கியை எடுத்தால் பீரங்கியால் பதிலடி- பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அமித் ஷா எச்சரிக்கை

தென்காசியில் நவ. 9இல் சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணிகளுக்கான எழுத்துத் தோ்வு

காரைக்குடி அருகே நூல் வெளியீட்டு விழா

தென்காசியில் 5,000 பனைவிதைகளை நடவு செய்ய திட்டம்

சிறுபான்மையினருக்கு பொருளாதார மேம்பாட்டு சிறப்பு கடன்

SCROLL FOR NEXT