உலகம்

இருபத்தாறு நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை குழநதைகள் பெற்ற அதிசய பெண் 

DIN

டாக்கா: வங்கதேசத்தில் இளம்பெண் ஒருவர் இருபத்தாறு நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை குழநதைகள் பெற்ற அதிசயம் நிகழ்ந்துள்ளது.

வங்கதேசத்தின் ஜெஸ்சூர் மாவட்டம் சர்சா பகுதியில் உள்ளது ஷியாம்லாகாச்சி கிராமம். இங்கு ஆரிபா சுல்தானா என்ற இளம்பெண் வசித்து வருகிறார். கர்ப்பிணியாக இருந்த இவருக்கு  கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி, குல்னா நகர மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குறைபிரசவமாக ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

தொடர்ந்து வீட்டிலிருந்த அவருக்கு கடந்த 22 ஆம் தேதி மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டது.  இதனை அடுத்து ஆரிபா உடனடியாக ஆதின்  என்ற இடத்தில உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அங்கு அதிசயத்தக்க வகையில் அவருக்கு அறுவை சிகிச்சை வழியே பெண் மற்றும் ஆண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன.

இதுபற்றி குறிப்பிட்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவரான ஷீலா பொடார் என்பவர் கூறியதாவது:

ஆரிபாவுக்கு இரண்டு கருப்பைகள் உள்ளன.  இதில் முதல் குழந்தை ஒரு கருப்பை வழியாக  பிறந்துள்ளது.  மற்றொரு கருப்பை வழியே தற்போது இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.

இது மிகவும் அரிய சம்பவம்.  இதற்கு முன்பு இதுபோன்ற சம்பவத்தினை நான் கேள்விப்பட்டது இல்லை. முதன்முறையாக இதுபோன்ற ஒரு சம்பவத்தினை நான் கேள்விப்படுகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவத் துறை வரலாற்றில் இதுபோன்றதொரு நிகழ்வு மிக அரிதாக நடைபெறுவது உண்டு துறை சார் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தகிக்கும் வெயில்... தற்காக்கத் தேவை விழிப்புணா்வு...

மகாசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கோவில்பட்டியில் மழை வேண்டி ராம நாம ஜெபம்

ஆறுமுகனேரியில் தெய்வீக சத் சங்கக் கூட்டம்

சேரன்மகாதேவி கோயிலில் கொடை விழா

SCROLL FOR NEXT