உலகம்

பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது ஆதரவாளர் அமெரிக்காவில் கைது

தடை செய்யப்பட்ட ஐ.எஸ். (இஸ்லாமிய தேசம்) மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாக, வக்கார்-உல்-ஹஸன்(35) என்ற பாகிஸ்தான்-அமெரிக்கரை, எஃப்பிஐ அமைப்பு கைது செய்தது.

DIN

தடை செய்யப்பட்ட ஐ.எஸ். (இஸ்லாமிய தேசம்) மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாக, வக்கார்-உல்-ஹஸன்(35) என்ற பாகிஸ்தான்-அமெரிக்கரை, எஃப்பிஐ அமைப்பு கைது செய்தது.
 பாகிஸ்தானின் உத்தம் குஜராத் பகுதியில் கடந்த 1984-ஆம் ஆண்டு பிறந்த வக்கார்-உல்-ஹஸன், தனது 15-ஆவது வயதில் அமெரிக்கா சென்றார். நியூயார்க்கில் வசித்த அவர், அமெரிக்க குடியுரிமை பெற்றாலும், பாகிஸ்தான் குடியுரிமையையும் தக்க வைத்துள்ளார்.
 இந்நிலையில், அவருக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாக கடந்த 2014-ஆம் ஆண்டு அமெரிக்க புலனாய்வு துறையான எஃப்பிஐக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, அவரிடம் எஃப்பிஐ அமைப்பினர் விசாரணை மேற்கொண்டனர்.
 அப்போது, ஐ.எஸ் மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக ஹஸன் ஒப்புக் கொண்டார்.
 அதனைத் தொடர்ந்து, அவரை கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் சரிந்து ரூ.90.74 ஆக நிறைவு!

இந்தியாவின் மிக மெலிதான ஸ்மார்ட்போன்! மோட்டோ எட்ஜ் 70 அறிமுகம்!

சென்னை, கடலோர மாவட்டங்களில் நாளை முதல் மழை! குடை கவனம்!

தேசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப்: சிம்ரன்ப்ரீத் கௌர் ப்ரார், மனு பாக்கருக்கு தங்கம்!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் நபர்கள் யார்?

SCROLL FOR NEXT