உலகம்

இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை: இலங்கையில் ஊரடங்கு உத்தரவு

DIN


இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை வெடித்துள்ளதால் அங்கு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் தொடர் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 250 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு இஸ்லாமியர்களுக்கு எதிராக பதற்றமான சூழல் நிலவி வந்தது. 

இந்த நிலையில், இன்று (திங்கள்கிழமை) இஸ்லாமியர்களின் கடைகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இதனால், அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று காவல்துறை செய்தித்தொடர்பாளர் எஸ்.பி. ருவான் குணசேகரா தெரிவித்தார். 

அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இதுகுறித்து தெரிவிக்கையில்,

"பயங்கரவாதிகளை கைது செய்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பாதுகாப்புப் படையினர் அயராது உழைக்கின்றனர். ஆனால் ஒவ்வொரு முறையும் உள்நாட்டில் வன்முறை ஏற்படுத்தி, அவர்களது விசாரணையில் கூடுதல் சுமையை கொடுக்கிறோம். நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும். வீண் வதந்திகளை நம்பவேண்டாம்" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT