உலகம்

கொழும்பு துறைமுக நகரத்தை முதல் தரத்தில் கட்டியமைக்க சிறிசேனா விருப்பம்

கொழும்பு துறைமுக நகரத்தைத் தெற்காசியாவில் முதல் தர வணிக மையமாக கட்டியமைக்க சிறிசேனா விருப்பம் தெரிவித்துள்ளார்.

DIN

கொழும்பு துறைமுக நகரத் திட்டப்பணிக்கான நிலத் திட்டம் இலங்கை நகர வளர்ச்சி பணியகத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசுத் தலைவர் சிறிசேனா செவ்வாய்கிழமை அதற்கான ஆவணத்தில் கையொப்பமிட்டார். 

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் படி இலங்கையும் சீனாவும் ஒத்துழைத்து கட்டியமைக்கும் திட்டப்பணி இதுவாகும். 

கொழும்புக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் மண் நிரப்பி அதில் இந்நகரம் கட்டியமைக்கப்படும் ஒரு புதிய நகரமாகும். தெற்காசியாவில் நிதி, சுற்றுலா, பொருள் புழக்கம், தகவல் தொழில் நுட்பம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் உயர தரமான நகரமாக இது திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவுடன் இணைந்து கொழும்பு துறைமுக நகரத்தை தெற்காசியாவில் முதல் தர வணிக மையமாகக் கட்டியமைக்க விரும்புவதாக சிறிசேனா செவ்வாய்கிழமை நடைபெற்ற கையொப்பமிடும் விழாவில் தெரிவித்தார்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT