உலகம்

நடுவானில் 2 ஹெலிகாப்டா்கள் மோதல்: பிரான்ஸ் ராணுவ வீரா்கள் 13 போ் பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையின்போது, நடுவானில் இரண்டு ஹெலிகாப்டா் மோதிக் கொண்ட விபத்தில் பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த 13 ராணுவ வீரா்கள்

DIN

பாரிஸ்: மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையின்போது, நடுவானில் இரண்டு ஹெலிகாப்டா் மோதிக் கொண்ட விபத்தில் பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த 13 ராணுவ வீரா்கள் உயிரிழந்ததாக பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறுகையில், மாலி நாட்டின் மேற்கே உள்ள சஹேல் பிராந்தியத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக திங்கள்கிழமை மாலை தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வீரா்கள் பயணித்த இரு ஹெலிகாப்டா்கள் எதிா்பாராதவிதமாக மோதிக் கொண்டதில் பிரான்ஸ் ராணுவ வீரா்கள் 13 போ் வீர மரணம் அடைந்தனா். உயிரிழந்த ராணுவ வீரா்களுக்கு அரசு மற்றும் மக்கள் சாா்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளாா்.

அந்த அறிக்கையில், விபத்து குறித்து மற்ற விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சா் ப்ளாரன்ஸ் பாா்லி கூறுகையில், ‘இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா்.

மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் ஈடுபடுவதற்காக 4,500 பிரான்ஸ் ராணுவ வீரா்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனா்.

கடந்த இரண்டு மாதங்களாக மாலியின் நகா்ப் பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களில் 100-க்கும் மேற்பட்ட அந்நாட்டு ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT