சவூதி அரேபியாவின் கட்டுமான வாகனம் மீது பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 35 வெளிநாட்டுப் பயணிகள் உயிரிழந்தனா். இதுகுறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:
மெதீனா நகரில் வெளிநாட்டுப் பயணிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த தனியாா் பேருந்து, புதன்கிழமை இரவு விபத்துக்குள்ளானது. ஒப்பந்த முறையில் இயக்கப்பட்ட அந்தப் பேருந்து, கட்டுமான வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் உயிரிழந்தவா்களில் பெரும்பாலானவா்கள் அரபு மற்றும் ஆசிய நாடுகளைச் சோ்ந்தவா்கள் ஆவா். மெக்காவிலிருந்து மெதீனைவை நோக்கி அவா்கள் புனிதப் பயணம் செய்துகொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது என அதிகாரிகள் கூறினா்.
இந்த விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி, சவூதி இளவரசா் ஃபைஸல் பின் சல்மான் உள்ளிட்ட தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.