உலகம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

DIN

ஷாப்பிங் மால் ஒன்றில் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மியாமி போலீஸார் 3 பேரை தேடி வருகின்றனர்.

ஃப்ளோரிடா மாகாணம் மியாமியிலுள்ள கல்சர் பே எனும் ஷாப்பிங் மாலில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 3 பேர் வியாழக்கிழமை திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபருக்கு நினைவு திரும்பியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மியாமி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT