உலகம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு மாரடைப்பு

நவாஸ் ஷெரீஃப் திங்கள்கிழமை இரவு மருத்துவமனையில் அவசரமாக அனுமதிக்கப்பட்டாா்.

DIN

உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பல்வேறு உடல் நலக் குறைபாடுகள் ஏற்பட்டதால், நவாஸ் ஷெரீஃப் திங்கள்கிழமை இரவு மருத்துவமனையில் அவசரமாக அனுமதிக்கப்பட்டாா்.

இதையடுத்து பனாமா ஆவண முறைகேடு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபுக்கு (69) கடுமையான உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் அவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், லாஹூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நவாஸ் ஷெரீஃபுக்கு சனிக்கிழமை திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இத்தகவலை பாகிஸ்தானைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஹமித் மிர் என்பவர் வெளியிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக இன்று முதல் தீவிர பிரசாரம்!

வடபழநியில் களைகட்டும் தைப்பூசம்: நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

சொல்லப் போனால்... எங்கே செல்லும் இந்தப் பாதை?

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

வணிக சிலிண்டர் விலை ரூ. 50 உயர்வு

SCROLL FOR NEXT