சீனாவின் உள் மங்கோலியா தன்னாட்சிப் பிரதேசத்தில், குழந்தைகள் மட்டுமே உள்ள ‘‘வண்ணமயமான ஹுலுன் புயர் குழந்தை பாடல் குழு’’ சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
2006-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இக்குழுவில், 5 முதல் 13 வயது வரையான குழந்தைகள் கலந்துகொண்டு, உள் மங்கோலிய பாரம்பரிய நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி வருகின்றனர்.
பல்வேறு நகரங்களுக்குச் சென்று இப்பாடல் குழு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. இக்குழுவுக்கு உலக அளவில் புகழ் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்: சீன வானொலி தமிழ்ப் பிரிவு