உலகம்

பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு

DIN

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ செப்டம்பர் 26-ஆம் நாள் நியூயார்க்கில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பில் கலந்து கொண்டார்.
 
ஐந்து நாட்டுத் தலைவர்களின் நெடுநோக்குத் வழிகாட்டலில் பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பின் செல்வாக்கு தொடர்ந்து உயர்ந்து வருகின்றது என்று வாங் யீ தெரிவித்தார்.

அரசியல் வழிமுறையின் மூலம், முக்கியமான பிரச்னைகளைத் தீர்ப்பதில் கூட்டாகப் பங்காற்ற வேண்டும் என்று ஐந்து நாடுகளுக்கு வாங் யீ வேண்டுகோள் விடுத்தார்.

பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பைப் பன்முகங்களிலும் உயர்த்த வேண்டும். குறிப்பாக, பொருளாதார மற்றும் வர்த்தகம், அரசியல் பாதுகாப்பு, மானிடவியல் பரிமாற்றம் ஆகியவற்றிலான ஒத்துழைப்பை முன்னேற்ற வேண்டும் என்று வாங் யீ தெரிவித்தார்.

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கு பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது நிலவும் சர்வதேச நிலைமையில், நெடுநோக்குத் தொடர்பைப் பிரிக்ஸ் நாடுகள் மேலும் வலுப்படுத்தி, பயனுள்ள ஒத்துழைப்பை ஆழமாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. 

தகவல்: சீன வானொலி தமிழ் பிரிவு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT