உலகம்

சீக்கிய போலீஸ் அதிகாரி அமெரிக்காவில் சுட்டுக் கொலை

DIN

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் போக்குவரத்து சிக்னலின் அருகில் சீக்கிய காவல்துறை அதிகாரி சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக டெக்ஸஸ் போலீஸ் அதிகாரி கூறியதாவது,

சைப்ரஸ் பகுதியில் உள்ள வில்லன்சி நீதிமன்றத்தின் பகுதியில் வெள்ளிக்கிழமை மதியம் 12.45 மணியளவில் அங்கு சென்ற காரை நிறுத்துமாறு தலிவால் உத்தரவிட்டார். அப்போது தலிவால் உடன் அந்த காரில் இருந்த ராபர்ட் சோலிஸ் (47) பேசிக்கொண்டிருந்தார். 

இந்நிலையில், தலிவால் தனது காருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த காரில் இருந்த நபர் ஓடிவந்து தலிவால் தலையில் பலமுறை சுட்டார். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே தலிவால் உயிரிழந்தார். 

42 வயதான சந்தீப் தலிவால், ஹாரிஸ் கவுண்டியின் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரி ஆவார், தனது மத உரிமைகளையும், அடையாளங்களையும் விட்டுத்தர முடியாது என்று கூறி போராடி டர்பன் அணியும் உரிமையைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT