முகப்பு
உலகம்

கரோனா: ஸ்பெயினில் பலி 10 ஆயிரத்தைக் கடந்தது; ஒரே நாளில் 950 பேர் இறப்பு

ஸ்பெயினில் கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

Updated On : 2 ஏப்ரல், 2020 at 4:28 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 9:50 PM

ஸ்பெயினில் கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

உலகம் முழுவதும் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு 47 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

இதில் ஸ்பெயினில் கரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை வியாழக்கிழமை 10,003 ஆக உயர்ந்துள்ளது. புதன்கிழமை இறப்பு எண்ணிக்கை 9,053 ஆக இருந்த நிலையில் ஒரே நாளில் 950 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

செவ்வாயன்று ஸ்பெயினில் கரோனா வைரஸ் தொடர்பாக 864 இறப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஸ்பெயினில் இதுவரை 1,10,238 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.