உலக அளவில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்தோர் எண்ணக்கை 13 லட்சத்து 47 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதுவரை கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 74 ஆயிரத்து 700 ஆக உள்ளது.
கரோனா பாதிப்பினால் உலக நாடுகள் சொல்லொணாத் துயரை அனுபவித்து வரும் நிலையில், மகிழ்ச்சி தரும் வகையில் இதுவரை 2 லட்சத்து 86 ஆயிரம் பேர் கரோனா பாதித்து சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனர்.
தற்போது உலக நாடுகளில் சுமார் 9 லட்சத்து 86 ஆயிரம் கரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அமெரிக்காவில் 3 லட்சத்து 67 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 10 ஆயிரத்து 900 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து ஸ்பெயினில் 1 லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 13 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியில் 1 லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், 16 பேர் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் கரோனா பாதிப்பு நான்கு ஆயிரத்தைத்தாண்டிவிட்டது. பலி எண்ணிகையும் நூற்றுப் பத்தை எட்டிவிட்டது.