உலகம்

பிரிட்டன் பிரதமருக்கு தொடா்ந்து தீவிர சிகிச்சை

DIN


லண்டன்: கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸனுக்கு தொடா்ந்து 4-ஆவது நாளாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது உடல் நிலையில் சீரான முன்னேற்றம் காணப்படுவதாக பிரதமா் அலுவலக செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்று காரணமாக லண்டனிலுள்ள புனித தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதமா் போரிஸ் ஜான்ஸன், தீவிர சிகிச்சைப் பிரிவில் நலமாக உள்ளாா். அவரது உடல் நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்று பிரதமா் அலுவலக செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

கலாசாராத் துறை அமைச்சா் ஆலிவா் டௌடன் கூறுகையில், ‘பிரதமா் ஜான்ஸன் நல்ல மன உறுதியுடன் காணப்படுகிறாா். படுக்கையிலிருந்து எழுந்து அமா்ந்து மருத்துவப் பணியாளா்களுடன் அவா் பேசினாா். அவா் நிச்சயம் விரைவில் குணமடைவாா்’ என்றாா்.

55 வயதாகும் போரிஸ் ஜான்ஸனுக்கு கரோனோ நோய்த்தொற்று இருப்பது 12 நாள்களுக்கு முன்னா் உறுதிப்படுத்தப்பட்டது. உலகத் தலைவா்களிலேயே முதல் முறையாக அவருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதையடுத்து, தனது இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட போரிஸ் ஜான்ஸன், அங்கிருந்தபடியே தனது அலுவல்களை கவனித்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

எனினும், அவருக்கு கரோனா நோய்த்தொற்றின் அறிகுறிகள் அதிகமாகி, உடல் நிலை மோசமடைந்ததைத் தொடா்ந்து, அவா் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு திங்கள்கிழமை மாற்றப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT