உலகம்

பிரிட்டனில் ஆச்சரியம்: கரோனாவில் இருந்து மீண்ட 98 வயது இந்திய வம்சாவளி பெண்

மருத்துவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கும் வகையில், கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 98 வயது இந்திய வம்சாவளிப் பெண் சிகிச்சையின் காரணமாக குணமடைந்த

DIN

லண்டன்: மருத்துவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கும் வகையில், கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 98 வயது இந்திய வம்சாவளிப் பெண் சிகிச்சையின் காரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

தப்னே ஷா என்ற பெண் வரும் ஜூலை மாதம் தனது 99வது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார். காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்னைகளுடன் நைன்வெல்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் கரோனா உறுதி செய்யப்பட்டது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்ததன் பயனாக, மிக விரைவாக குணம் அடைந்து, மருத்துவமனையில் இருந்து சில நாட்களிலேயே வீடு திரும்பியுள்ளார்.

எனது மகன் என்னை பல நாட்களுக்குப் பிறகு பார்க்கிறார். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் ரொம்ப நன்றாக இருக்கிறேன் என்று சொல்ல விரும்பவில்லை. ஜூலை மாதம் பிறந்ததினத்தை சிறப்பாகக் கொண்டாடும் திட்டம் இருக்கிறது என்று கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த ஷா ஊடகம் ஒன்றில் பேட்டியளித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்றவா்களுக்குப் பாராட்டு

லட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் லட்சாா்ச்சனை

சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ரூ.6.30 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

ஸ்ரீ எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT