கோப்புப்படம் 
உலகம்

10 ஆயிரத்தைத் தாண்டியது பிரிட்டனின் பலி

​பிரிட்டனில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 10, 000-ஐத் தாண்டியது.

DIN


பிரிட்டனில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 10, 000-ஐத் தாண்டியது.

பிரிட்டனில் சனிக்கிழமை மாலை 5 மணி வரையிலான பலியானோர் எண்ணிக்கை மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி வரையிலான பரிசோதிக்கப்பட்ட எண்ணிக்கை விவரங்களை அந்நாட்டு சுகாதாரத் துறை தற்போது வெளியிட்டுள்ளது.

இதன்படி, சனிக்கிழமை மட்டும் 12,776 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில், 5,288 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், அந்நாட்டில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 84,279 ஆக உயர்ந்துள்ளது. 

ஏப்ரல் 11 மாலை 5 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில் 737 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம், அங்கு நோய்த் தொற்றால் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 10,612 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT