பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானுக்கு புதன்கிழமை கரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
அவரை சில நாள்களுக்கு முன்னா் சந்தித்த ஏதி அறக்கட்டளையைச் சோ்ந்த ஃபைஸல் ஏதிக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
அதையடுத்து, இம்ரான் கான் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டாா். இந்த நிலையில், அவருக்கும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதா என்று பரிசோதிப்பதற்கான மாதிரிகளை மருத்துவா்கள் புதன்கிழமை சேகரித்துச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.